மாதாந்தக் கருத்தரங்கு – செப்டம்பர் 2025

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: மருத்துவர் வரதா கந்தசாமி

தொல்காப்பியம் காட்டும் இயற்கை வெளியும் பண்பாட்டுவெளியும்
– முனைவர் ப. வேல்முருகன்
பேராசிரியர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்.

ஐந்திணையும் கனடாவும்
செல்வி ஆரணி ஞானநாயகன்
பொறியாளர் – இளங்கலைத் தமிழ், கனடா.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
செல்வி சுருதிகா வேணுதாஸ்
4ம் வகுப்பு, பெண்டேல் பள்ளி, கனடா.

நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நாள்: சனிக்கிழமை, செப்டம்பர் 27, 2025
நேரம்: பிற்பகல் 7.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்)
Join Zoom Meeting:
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

You may also like...