மாதாந்தக் கருத்தரங்கு – சூன் 2025

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு சூன் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: திருமதி மாகிறெற் பவுலஸ் (துணைச் செயலாளர்)

ஈழத்து ஓலைச் சுவடிகளைப் பதிப்பிப்பதில் ஏற்படும் பிரச்சனைகள்
– முனைவர் பால. சிவகடாட்சம்
மேனாள் துறைத்தலைவர், உயிரியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

சிலப்பதிகாரம் காட்டும் அகத்திணை மரபு தொல்காப்பியத்தின் வளர்ச்சியே
திரு. இராச்குமார் குணரட்ணம்
கணினிப் பொறியாளர், தமிழ் முதுகலை, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.

திருக்குறள் – கடவுள் வாழ்த்து
செல்வன் பிரணவசுமன் சுகந்தன்
7ம் வகுப்பு, ஆசில் மக்காலியன் பள்ளி, கனடா.

நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நாள்: சனிக்கிழமை, சூன் 07, 2025
நேரம்: பிற்பகல் 7.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்)
Join Zoom Meeting:
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

You may also like...