மாதாந்தக் கருத்தரங்கு – மே 2025
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)
நெறியாளர்: திருமதி நந்தா காசிவிஸ்வநாதன் (அங்கத்தவர்)
தொல்காப்பியத்தில் ஒரு பொருட்சொல்: கடியென்கிளவி
– பேராசிரியர் ப. அருளி
ஆய்வறிஞர், சொல்லாய்வு அறிஞர், புதுச்சேரி
முத்தமிழ்
செல்வி தரணியா தசிபரன்
வகுப்பு 10, சோஃப்வில் பள்ளி மாணவர், கனடா.
திருக்குறள் முற்றோதல்
செல்வி சனார்த்தா உதயநந்தன்
வள்ளுவன்வழி உலக இணையப்பள்ளி பள்ளி மாணவர், கனடா.
நன்றியுரை: திருமதி மாகிறெற் பவுலஸ் (துணைச் செயலாளர்)
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
நாள்: சனிக்கிழமை, மே 10, 2025
நேரம்: பிற்பகல் 7.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்)
Join Zoom Meeting:
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.
