மாதாந்தக் கருத்தரங்கு – ஏப்ரல் 2024

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர். செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: புவனா கருணாகரன்

தொல்காப்பியரின் உரியியல்
– முனைவர். ச. திருஞானசம்பந்தம்
தகைசால் பேராசிரியர், தொல்காப்பியர் இருக்கை – தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

வெட்சித் தலைமகன்
– திருமதி துளசி விக்கினேஸ்வரன்

இன்சொல் பேசுவோம்
– மைலாப்பூர் இரட்டையர்
செல்வன். ஆயுஷ்மனன் சாய் சர்மா
செல்வன். ஆக்க்ஷமனன் சாய் சர்மா

நன்றியுரை: திரு. சி. சண்முகராஜா (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நாள்: சனிக்கிழமை, ஏப்ரல் 13, 2024
நேரம்: பிற்பகல் 6.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்)
Join Zoom Meeting:
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

You may also like...