suganthan

இலங்கையிலும் கனடாவிலும் தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்த கல்வியாளர் அமரர் சபா. அருள் சுப்பிரமணியம்அவர்கள்.

எஸ். கே. குமரகுரு தோன்றின் புகழொடு தோன்றுக என்பது குறள். மாறாக தனது இடைவிடாத முயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு என்பனவற்றால் இலங்கையிலும் கனடாவிலும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தியவர்ளூ புலரும் பொழுதெல்லாம் தமிழ்ச்சிறார்களின் கல்விக்கே என்று வாழ்வின் பெரும் பகுதியை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்த கல்வியலாளர.; எப்படிக்கற்பிக்க வேண்டும், அதற்காக எவற்றையெல்வாம்...

அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்

கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவராக விளங்கிய அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் சூம் (ZOOM) இணையச் செயலியூடாக இடம்பெற இருக்கின்றது. இந்நினைவஞ்சலிக் கூட்டத்தில் இணைந்து கொள்வதற்கான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. விடயம்: அமரர். திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம்காலம்: நவம்பர் 08, 2021 (திங்கட்கிழமை)நேரம்: மாலை 07:00 தொடக்கம்...

அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம்

முனைவர். செல்வநாயகி ஸ்ரீதாஸ் தோற்றம், வாழ்வு, மறைவு. இவற்றிற்கு இடைப்பட்ட காலப் பகுதி தான் எமது வாழ்க்கையாக அமைகிறது. பெருமை பேசிக் கொள்வதும், பகைமை பாராட்டுவதும், முடிந்தால் அன்பும் பண்பும் கருணையும் மிக்க வாழ்க்கையை நடாத்தி, நாம் வாழும் சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக இருப்பதும், இது தான் வாழ்க்கை. தமிழ் மக்களால் அறியப்படும் புராணக் கதைகளில், எனது...

அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்கள் நினைவாக

அறிவார்ந்த தமிழாசான் அருள்சுப்ர மணியம்பேர் அடக்கத்தின் உருவானவர் – செயல் ஆற்றலில் திருவானவர் நெறிநின்று பணிசெய்த நிறைவோடு எமைவிட்டு நிமலனடி சேர்ந்துவிட்டார் – எம்கண் நீர்சோர நீங்கிவிட்டார்! பழகுதற் கினியவர், பண்போடு வாழ்ந்தவர் பற்றான தமிழ்ப்பாவலர்! – சிறார் படிப்பிற்குப் பெருங்காவலர்! இழகியநல் லுளத்தொடு இனியதொரு நட்போடு இருந்தவர் எங்குசென்றார்! – காலன் இவரையேன் கொண்டு...

தொல்காப்பிய விழாப் போட்டிகள் – 2020 – இரத்துச்செய்யப்படுகின்றன

நாம் எதிர்பாராதவாறு மீண்டும் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், இவ்வாண்டிற்கான தொல்காப்பியவிழாப் போட்டிகள் யாவும் இரத்துச்செய்யப்படுகின்றன என்பதை அறியத்தருகின்றோம். இவ்வாண்டு இப்போட்டிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் அவ்வாண்டுக்குரிய போட்டிகளில் கட்டணம் செலுத்தாமல் பங்கேற்கலாம் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம். நன்றி.

போட்டிகளுக்கான கையேடுகள் – 2020

தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2020 மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளுக்கான கையேடுகள் போட்டிகள் நடைபெறும் இடமும் காலமும், நாடு இயல்புநிலைக்குத் திரும்பியதன் பின்னர் அறியத்தரப்படும். இம்முறை போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. பிரிவு வகுப்பு பிறந்த...

தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2020

மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் போட்டி நாள்: மே 10, 2019 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் இம்முறை போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. பிரிவு வகுப்பு பிறந்த ஆண்டு போட்டிகள் 1 JK...