“தொல்காப்பியச் செம்மல்” முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டிற்கு வித்திட்டு, அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிய முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களுக்குத் “தொல்காப்பியச் செம்மல்” என்னும் விருதினை வழங்கி அவரைக் கௌரவித்துப் பாராட்டி வாழ்த்துகின்றது.

“தொல்காப்பியத் தேனீ” முனைவர் இல. சுந்தரம்
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றிக்கு அயராது உழைத்த முனைவர் இல. சுந்தரம் அவர்களுக்குத் “தொல்காப்பியத் தேனீ” என்னும் விருதினை வழங்கி அவரைக் கௌரவித்துப் பாராட்டி வாழ்த்துகின்றது.




